இந்தியா-ஈராக் உறவு வலுப்பட சதாம் ஹுசைன் அழைப்பு
துபாய்:
இந்தியா, ஈராக் நாடுகளின் இருதரப்பு உறவு வலுப்பட இரு நாடுகளும் இன்னும் அதிகமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஈராக் அதிபர்சதாம் ஹூசேன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாயின் சார்பில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா ஈராக் சென்றுள்ளார். அவருடன் வர்த்தகர்கள் மற்றும்அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் சென்றுள்ளது.
ஈராக் சென்றுள்ள அஜித் குமார் பாஞ்சா ஞாயிற்றுக்கிழமை மாலை அதிபர் சதாம் ஹூசேனை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் வாஜ்பாய்,சதாமிற்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுத்தார்.
வாஜ்பாய் தனது கடிதத்தில், இந்தியா, ஈராக் ஆகிய இருநாடுகளும் அனைத்துத் துறையிலும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக கலாச்சாரவளர்ச்சிக்காக இரு நாட்டின் பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை பரிமாறிக் கொள்வது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த சதாம் ஹூசேன் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். பின்னர் கல்வித்துறையில் மட்டுமின்றி, மருத்துவத்துறையிலும்,விவசாயத்துறையிலும் இரு நாட்டு வல்லுநர்களும் பரிமாறிக் கொள்ளப்படுவது நல்லது. அப்போதுதான் இரு நாட்டு உறவும் வலுப்படும் என்றார்.
மேலும், மருத்துவத்துறையில் இருநாட்டு வல்லுநர்களும் சந்தித்துப் பேசுவதால், சமீபத்திய கண்டுபிடிப்புக்கள், வளர்ச்சிகள் போன்றவை குறித்து எளிதில்பரிமாறிக் கொள்ள முடியும்.
ஈராக் துணை அதிபர் டாகா யாசின் அக்டோபர் மாதம் டெல்லி செல்கிறார். அப்போது இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்துஆலோசிக்கப்படும் என்றார் சதாம் ஹூசேன்.
இந்த சந்திப்பின்போது, ஈராக் துணை பிரதமர் தாரிக் அஸூம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அதிபர் சதாம் ஹூசேனும், இந்திய அமைச்சர் அஜித்குமார் பாஞ்சாவுக்குமிடையே நடந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. இந்த சந்திப்பு மிகவும் தோழமை உணர்வுடன் நடந்தது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications