சென்னை டூ கவுஹாத்தி ரயில் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், சென்னை, கொச்சி ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் கவுஹாத்தி, பாட்னா செல்லும் ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் ரயில் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் அப்பகுதி ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையிலிருந்து இரவு 10.45 மணிக்கு கவுஹாத்திக்குச் செல்லும் கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கொச்சியிலிருந்து சென்னை வழியாக மாலை 4.40 மணிக்கு பாட்னாவிற்கு இயக்கப்படும் கொச்சி-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications