ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது .. வைகோ
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு காணும்ஜெயலலிதாவின் கனவு பலிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
ம.தி.மு.க இலக்கிய அணி சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா சென்னைஎழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவில் வைகோபேசுகையில், கோட்டை நாற்காலியில் அமர்ந்த அகம்பாவக்காரி ஜெயலலிதா மீண்டும்கோட்டை நாற்காலியில் அமருவதற்கு ஒரு போதும் விடமாட்டோம்.
அவருக்கு பெரியாரை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை. நான் ஒரு பாப்பாத்திஎன்று சட்டசபையிலேயே பேசியவருக்கு பெரியாரைப்பற்றி பேச எந்த தகுதியும்கிடையாது.
ஆங்கிலேயேரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆங்கிலப்பெண்மணியே மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த பொதுத்தேர்தலில் நூறுஇடம் கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது.
கம்யூனிஸ்ட்கள் பாவம் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் எங்கேஒதுங்கலாம் என்று தோட்டத்துப் பக்கம் ஒதுங்கியிருக்கிறார்கள். மத்தியில் உள்ளஅரசை தூக்கிவிடலாம் என்று கற்பனைக் கனவுகளை எல்லாம் இனிமேல் அம்மையார்விட்டுவிடவேண்டும்.
நான் டெல்லி போகிறேன், சோனியாவை சந்திக்கிறேன், ஆட்சியை மாற்றுகிறேன்என்று கூறிவிட்டுச் சென்றவர் வந்த பாதையில் கூட திரும்ப வராமல் ஐதராபாத்திற்குஒடிப்போனார்.
இனிமேல் காங்கிரஸை எங்கே என்று தான் தேடிப்பிடிக்க வேண்டும்.செங்கொடிகாரர்களுக்கு அதோகதிதான். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிதான்இனி ஆட்சிக்கு வருவார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை அதைவிட மோசம். இந்த நொண்டிப்பட்டாளத்தை வைத்துக்கொண்டா மத்திய அரசை ஜெயலலிதா கவிழ்க்கப் போகிறார்?அது ஒரு போதும் நடக்காது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். அடுத்ததேர்தலிலும் வெற்றிபெறும். தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான கூட்டணிதான்வெற்றிபெறும் என்றார் வைகோ.