இன்று வீரப்பன்- கோபால் சந்திப்பு?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

அரசுத்தூதர் கோபால் செவ்வாய்க்கிழமை வீரப்பனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் கடத்தி ஏறக்குறைய 59 நாட்களாகிவிட்டன.

வீரப்பனின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்து இருப்பதால் ராஜ்குமார் விடுவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டு வருவதற்காக அரசுத்தூதர் கோபால் 4 வது முறையாக சத்தியமங்கலம்காட்டுக்குச் சென்றுள்ளார்.

கடந்த 5 நாட்களாக சத்தியமங்கலம் காட்டு எல்லையில் காத்திருந்தார் கோபால். இதற்கிடையே திங்கள்கிழமை காலை வீரப்பனிடமிருந்து,கோபாலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கூறுகையில், வீரப்பனின் தூதுவர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசி விட்டதாகவும்,வீரப்பனை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை காட்டுக்குச் செல்லவிருப்பதாகவும் கோபால் என்னைத் தொடர்பு கொண்டு கூறினார்என்றார்.

இதனால் எப்படியும் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வீரப்பனைக், கோபால் சந்தித்து விடுவார் என்று தெரிகிறது. வீரப்பன் மனம் இரங்கிராஜ்குமார் உள்பட 4 பணய கைதிகளையும் கோபாலுடன் அனுப்பி வைப்பானா அல்லது தனது நிபந்தனையில் பிடிவாதமாக இருப்பானா என்பது இன்னும்ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+