நாளை சிறை நிரப்புகிறது த.மா.கா
சென்னை:
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் த.மா.கா.வினர் புதன் கிழமை சிறை நிரப்பும்போராட்டம் நடத்துகின்றனர்.
காரைக்குடியில் ப.சிதம்பரம், சென்னையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தஞ்சாவூரில் த.மா.கா. தலைவர் மூப்பனார் கலந்து கொள்ளலாம் எனத் தெரிகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம்தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை இக்கட்சி 27ம் தேதி நடத்துகிறது.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டு இக்கட்சியினர் சிறை செல்கின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் தலைவர்கள் விவரங்களை இக்கட்சி செவ்வாய் கிழமைவெளியிட்டது. சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி,முக்தா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பெரம்பலூரில் மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார், காரைக்குடியில் முன்னாள் நிதியமைச்சர்ப.சிதம்பரம், திருநெல்வேலியில் பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரியில் தனுஷ்கோடி ஆதித்தன்,ராமநாதபுரத்தில் என்.எஸ்.வி.சித்தன், தேனியில் பாரமலை, திருச்சியில் அப்துல்காதர் உள்ளிட்ட பலதலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.