ஹூரியத் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய நிபுணர் குழு சந்திப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய நிபுணர் குழு காஷ்மீர் வந்துள்ளது. அவர்கள் ஹூரியத் தலைவர்களை திங்கள்கிழமைமாலை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு சுமார் 90 நிமிடம் நடந்தது. ஐரோப்பிய நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள், ஹூரியத் கமிட்டி தலைவர் பேராசிரியர் அப்துல் கானி பட்டைச் சந்தித்துப்பேசினர்.
முன்னதாக, மோன்டே பெர்னாடு தலைமையில் வந்த அந்த நிபுணர் குழு, காஷ்மீர் டி.ஜி.பி. மற்றும் அகில இந்திய காஷ்மீர் மக்கள் முன்னணிக் கழகத்தின்தலைவர் பாசல் ஹக் குவாரேஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதில் பாசல் ஹக், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் இந்தியாவுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனைத்துமுயற்சிகளையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பதும் நினைவிருக்கலாம்.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்த பிற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், அங்கு நிலவி வரும்பிரச்சனைகளை ஆராயும் நோக்கிலும் இக்குழு காஷ்மீர் வந்திருக்கிறது.
யு.என்.ஐ.