இலங்கையில் புலிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழப்பாணத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
மேற்கு சாவகச்சேரியில் உள்ள மடுவில் மற்றும் சரசாலை பகுதியில் ராணுவ வீரர்கள், புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தத்தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர் என்றார்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் விடுதலைப்புலிகளிடமிருந்து, ராணுவம் சாவகச்சேரியைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தலைநகர் கொழும்பு உள்பட இலங்கை முழுவதும் அக்டோபர் மாதம் 10 ம் தேதி நடைபெறும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications