ருமேனிய வீராங்கனையின் தங்கப் பதக்கத்துக்கு வேட்டு வைத்த மாத்திரை
சிட்னி:
ஜலதோஷம் சரியாவதற்காக தின்ற இரு மாத்திரைகள் தனது தங்கப் பதக்கத்துக்குவேட்டு வைக்கும் என்று ருமேனிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆன்ட்ரியா ராடுகான்நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் பெண்களுக்கான ஆல்-ரவுன்ட் சுற்றில் ராடுகான தங்கப்பதக்கம் வென்றார். அப்போட்டியின் முடிவில் நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பதுதெரியவந்தது.
இதையடுத்து அப் போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக்கமிட்டி பறித்துவிட்டது.
உண்மையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை ராடுகான் பயன்படுத்தவில்லை.ஆல்-ரவுன்ட் சுற்றில் கலந்து கொள்வதற்கு முன் தனக்கு இருந்த ஜலதோஷம்சரியாவதற்காக இரு மாத்திரைகளை அவர் தின்றார்.
அந்த மாத்திரைகளில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள்பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால், மருத்துவப் பரிசோதனையில் ராடுகான் சிக்கிக்கொண்டார்.
ராடுகானுக்கு அந்த மாத்திரைகளை அளித்த ருமேனிய அணியின் மருத்துவரும் சிட்னிஒலிம்பிக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெறும்ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றுஒலிம்பிக் கமிட்டியின் இயக்குநர் ஜெனர் பிரான்கோயிஸ் கர்ரார்டு தெரிவித்தார்.
ஆல்-ரவுன்ட் சுற்றில் ராடுகான் வென்ற தங்கப் பதக்கம்தான் பறிக்கப்பட்டதே தவிர,அணிப் பிரிவில் வென்ற தங்கமும், வால்ட் பிரிவில் வென்ற வெள்ளிப் பதக்கமும்பறிக்கப்படாது என்றார் கர்ரார்டு.
சிட்னி ஒலிம்பிக்கில் இதுவரை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ராடுகானுடன் சேர்த்து 5 பேர் பிடிபட்டுள்ளனர்.
இதில் 3 பேர் பல்கேரிய நாட்டையும் மற்றொருவர் லாட்வியா நாட்டையும்சேர்ந்தவர்கள். பல்கேரியாவைச் சேர்ந்த 3 பேரும் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள்.
அவர்கள் வென்ற பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications