கருணாநிதிக்கு எங்கள் மீது பிரியம் அதிகம் .. மூப்பனார்
கோவை:
கருணாநிதிக்கு எங்கள் மீது பிரியம் அதிகம் என கோவையில் மூப்பனார் கூறினார்.
திருப்பூரில் நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மூப்பனார் விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மூப்பனார் பேட்டி அளித்தார்.
சிறை நிரப்பும் போராட்டத்தில், 6 மாதம் சிறைத் தண்டனை என கருணாநிதி கூறியுள்ளரே என நிருபர்கள் கேட்டபோது, "ஆறுமாதம் என்ன, ஆறு ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்லத் தாயர் என்றார்.
கே: எப்போதும் இல்லாத நடவடிக்கை இப்போது ஏன்?
ப: எங்கள் மீது கருணாநிதிக்கு பிரியம் அதிகரித்துள்ளது.
கே: ஈரோட்டில் தி.மு.க.,வினர், த.மா.கவினர் குறித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனரே?
ப: இது கீழ்த்தரமான விளம்பரம்.
கே: அரசியலில் உங்களைப் பார்த்து கருணாநிதி பயப்படுகிறாரா?
ப: இல்லை, இல்லை, கருணாநிதி மிகவும் தைரியசாலி.
கே: த.மா.க.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கருணாநிதி கூறியுள்ளரே?
ப: இதனை கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும் .
கே: ஜோதிபாசு அரசைக் கலைக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறதே?
ப: ஜோதிபாசு அரசியலில் அனுபவம் நிறைந்த மனிதர். அவருக்கு ஆட்சி நடத்த
தெரியவில்லை எனக் கூறுவது தவறு. மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதே. 356 வது பிகிவு நீடிக்க வேண்டும். எப்போதுபயன்படுத்த வேண்டுமோ, அப்போது பயன்படுத்த வேண்டும்.
கே:: கூட்டணி ஆட்சி பற்றி?
ப: தேர்தல் வரட்டும் யோசிப்போம் என்றார் மூப்பனார்.
சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில், மூப்பனாருடன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் ஒரே விமானத்தில்வந்திறங்கினர். விமானத்தில் இருவரும் அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.