அமைச்சர்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: கர்நாடக தலித் அமைப்பு
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில், மத்திய அரசு தலையிடாமல் இருப்பதைக்கண்டித்து மத்திய அமைச்சர்களின் வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கர்நாடக தலித் சங்கர்ஷ சமிதி என்ற கன்னட அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி அமைப்பின் தலைவர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜ்குமார் கடத்தப்பட்டு 58 நாட்கள் கடந்துவிட்டன. அவரை விடுவிக்க மத்திய அரசு எந்தமுயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் மகள் கடத்தப்பட்ட போதும்,விமானம் கடத்தப்பட்ட போதும விரைந்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசு ராஜ்குமார்விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது.
காவிரிப் பிரச்சனையை ஆர்வம் காட்டிய மத்திய அரசு ராஜ்குமார் விஷயத்தில் அக்கறைகாட்டாமல் இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக கூட ராஜ்குமார்குடும்பத்திற்கு ஆறுதல் கூறவில்லை.
மத்திய அரசின் அக்கறையின்மையால் இரு மாநில அரசகளும் சிக்கலில் சிக்கி உள்ளன.மத்திய அரசின் மெத்தனத்தைக் கண்டித்து வயாலிக்காவலிலில் உள்ள மத்தியசுற்றுலாத்துறை அமைச்சர் அனந்தகுமார் வீட்டின் முன்பு 29-ம் தேதி முதலில் ஆர்ப்பாட்டம்நடததுவோம்.
அடுத்த கட்டமாக எல்லா மத்திய அமைச்சர்களையும் எதிரத்து போராட்டம் நடக்கும். 28-ம்தேதி பந்த்தில் எங்கள் சங்கமும் பங்கேற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications