ஸ்விஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 8 இந்தியர்கள் பலி
நியூயார்க்:
சுவிட்ஸர்லாந்தின் கான்டன் வாலைஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இரண்டு ஹெலிகாப்படர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மோதிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த 8 இந்தியர்களும், பைலடடுகளில் ஒருவரும் இறந்தனர்.
இந்த விபத்து சியான் நகரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பியோசான் என்ற இடத்தில் நடந்தது.
சுற்றுலா வந்திருந்த 60 இந்தியர்கள் இயற்கைக் காட்சிகளை பார்வையிடும் 5 நிமிட விமான பயணத்திற்காக காத்திருந்த போது இந்த கோர விபத்துஏற்படட்து. இதுவரை நடந்த விபத்துக்களிலேயே இதுதான் மோசமானது என சுவிஸ் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில் பயணம் செய்த 8 இந்தியர்களும் பைலட்டுகளில் ஒருவரும் இறந்தனர். இதைத் தவிர மற்றொரு பெல் ஜெட் ரேஞ்சரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருசுற்றுலாப் பயணியும் பலியானார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருடன் பயணம் செய்த மூன்று சுற்றூலாப் பயணிகள்காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர் விசிறிகள், தரையிறங்கும் போது மோதிக் கொண்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்தது எனவிபத்தைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீஸ் விபத்து நடந்த இடத்தை சுற்றி இருக்கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து நடந்த போது வானிலை சீராகவே இருந்தது. விபத்துக்கு மனித தவறே காரணம் என கூறப்படுகிறது.
இந்த மாதம் 5-ம் தேதி இதே போன்ற ஹெலிகாப்டர் கான் வாடில் விபத்துக்குள்ளானது. அதில் பைலட் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications