தமிழகம் முழுவதும் 1,25,000 த.மா.காவினர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் புதன் கிழமை நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் ஒன்றேகால் லட்சம்தமாகாவினர் கைதாகியுள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

காரைக்குடியில் ப.சிதம்பரம், செனையில் ஜெயந்தி நடராஜன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், செல்லக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டபோதுபோலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளைமுன் வைத்து மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை இக்கட்சி அறிவித்தது.

அதன்படி புதன் கிழமை காலை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மத்தியமாநில அரசு அலுவலகங்கள் முன்பு த.மா.கா.வினர் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

சென்னையில் 14 சட்டமன்றத் தொகுதிகளிலும் த.மா.கா. சார்பில் மறியல் போராட்டம்நடைபெற்றது. மழை காரணமாக சில இடங்களில் தாமதமாக துவங்கிய இந்தபோராட்டத்தில் த.மா.கா.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னை மயிலாப்பூரில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையிலும்,அண்ணா நகரில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையிலும், கோடம்பாக்கத்தில்டாக்டர் செல்லக்குமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.

அதேபோல் காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலும்,நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி. தலைமையிலும், கன்னியாகுமரியில்முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையிலும் மறியல் போராட்டம்நடந்தது.

தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும்போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்கள் மீது தடையை மீறியதாக வழக்குத் தொடர்ந்து சிறையில்அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் மாலையில்அவர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம்தமாகாவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்புதன் கிழமை காலை நிருபர்களை சந்தித்த தமாகா செய்தித் தொடர்பாளர்ஞானதேசிகன் தெரிவித்தார்.

தமாகா அறிவித்த இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கட்சித் தலைவர் மூப்பனார்கலந்து கொள்ளவில்லை. அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் தஞ்சையில் நடந்தபோராட்டத்தில் கலந்து கொண்டார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 6ஆயிரம் தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், குறைந்த அளவு தொண்டர்களே கைது செய்யப்பட்டனர். எதிர்பார்த்த அளவிற்கு கோவை,நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில்பங்கேற்கவில்லை.

கோவையில் நடந்த போராட்டத்தில் 450 பெண்கள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஒரு பிரிவினருக்கு த.மா.கா.,எம்.எல்,ஏ.,வும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான வி.கே லட்சுமணன்தலைமை வகித்தார். கோவை மேற்குப் பகுதிக்கு த.மா.க., செயலர் கார்வேந்தன் தலைமை வகித்தார்.

கோவையில், 3 ஆயிரத்து 500 பேரும், புறநகர் பகுதியில் ஆயிரத்து 1500 பேருமாக, 5 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோவையில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், 200 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் 135 பேரும், குன்னூரில், 42 பேரும்,கூடலூரில், 30 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஈரோட்டில்142 பேரும், மற்ற இடங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

எனவே,3 மாவட்டங்களில் த.மா.கா நடத்திய போராட்டத்திற்கு தொண்டர்களிடையே கூட போதுமான வரவேற்புஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+