கல்வீச்சில் மதம் பிடித்த யானை "எஸ்கேப்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே யானை மீது கல்வீசப்பட்டதால் மதம் பிடித்த யானை அங்கும் ஓடி ஆட்டோக்களைச் சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டது. மதம் பிடித்தஅந்த யானையை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில் வில்லுக்குரி பாலம் அருகே தேவசம்போர்டுக்குச் சொந்தமான யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் யானை மீது கல் வீசினார்.
இதனால் யானைக்குக் காயம் ஏற்பட்டுப் பிளிரியது. இதனால் ஆத்திரம் அடைந்த யானைப்பாகன் சதீஷ், ஆட்டோ டிரைவரைத் தாக்கும்படி யானையிடம்சங்கேத மொழியில் கூறினார்.
இதையடுத்து யானை மதம்பிடித்து ஓடி அங்கிருந்த இரண்டு ஆட்டோக்களைச் சேதப்படுத்திவிட்டு யானைப் பாகனுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு தப்பியோடிவிட்டது.
இதையடுத்துப் போலீஸாருக்குப் புகார் கூறப்பட்டது. போலீஸார் நள்ளிரவில் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல்கொடுத்து உஷார் படுத்தினர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் காணாமல் போன யானை போலீஸாருக்குபெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
யானையால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படக்கூடாது என்று கவலையுடன் போலீஸார் யானையைத் தேடி வருகிறார்கள். நள்ளிரவு வரை யானைபிடிபடவில்லை.












Click it and Unblock the Notifications