பேச வாருங்கள் .. இந்தியாவை மீண்டும் அழைக்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பாகிஸ்தானுக்கு இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் வெள்ளிக்கிழமைகூறினார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் பிரச்சனை பல்லாண்டுகளாகத் தீராமல் இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும். பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது. ஆனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் கைவிட்டால்தான்பேச்சுவார்த்தையே என்று திட்டவட்டமாக இந்தியா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லனிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல தலைவர்கள் காஷ்மீர் பிரச்சனைகுறித்து கேள்வி எழுப்பினார்கள். அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் காஷ்மீர் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணும்படிவற்புறுத்தினார்.
கார்கில் போருக்குப்பின் இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின்தீவிரவாத அமைப்பு போர்நிறுத்தம் அறிவித்து இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் பாகிஸ்தானின் நிர்பந்தத்தை இந்தியா ஏற்க மறுத்து விட்டதால் அது தோல்வியில் முடிந்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications