1 வயதுக் குழந்தையைக் கொன்ற 2 சிறுவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் தற்செயலாக ஒன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் தள்ளியதில், அது இறந்தது. இதையடுத்து இரண்டு சிறுவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
திருச்சியை அடுத்த தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பக்கத்துவீட்டு ஒன்றரை வயது குழந்தையை கையில் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது கை தவறி அக்குழந்தை கிணற்றில் விழுந்து இறந்தது. புதன்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக இரண்டு சிறுவர்களையும்போலீஸார் கைது செய்தனர்.
வியாழக்கிழமை காலை குழந்தையின் பிணம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications