For Quick Alerts
For Daily Alerts
Just In
போர்ட்பிளேர் நகராட்சித் தலைவராக திமுக பெண் தேர்வு
சென்னை:
போர்ட் பிளேர் நகரசபைத் தலைவராக திமுக வைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமீபத்தில் அந்தமான்-போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக-பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் போர்ட் பிளேயர் நகரசபையை திமுக கூட்டணி கைப்பற்றியது.
இதையடுத்து அந்தமான் நகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது திமுக வைச் சேர்ந்த பெண் மார்சிலாடுங் நகர்மன்றத் தலைவராக ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று திமுக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Comments
Story first published: Friday, September 29, 2000, 5:30 [IST]