ஓய்வுபெறுகிறார் ராணுவ தலைமை தளபதி
டெல்லி:
இந்திய தலைமை ராணுவ தளபதி பிரகாஷ் மாலிக் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார். அவருடைய 3 வருட பதவிக்காலம் சனிக்கிழமையுடன்முடிவடைகிறது.
1997 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய ராணுவத்தின் சிக் லைட் இன்பான்டரி ரெஜிமென்ட் பிரிவு 19 வது ராணுவ தலைமை தளபதியாகநியமிக்கப்பட்டார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தி, போரை சாமர்த்தியமாகச் சமாளித்தவர் மாலிக்.
ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ விட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் இருந்தது. மேலும் 1994-95ம் ஆண்டுகளில் வெல்லிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் கமான்டன்ட்டாக இருந்தபோது அங்கு கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியவர் மாலிக்.
மாலிக், கம்ப்யூட்டர் மூலம் எல்லைப்பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம், தீவிரவாதிகளின் ஊடுருவல் போன்றவை குறித்து வரைபடமிட்டு தனியே பிரித்துஎடுத்துக் கொண்டு ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.