கைதியின் கதைக்குப் பரிசு
சென்னை:
பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இரா.கண்ணன் எழுதிய சிறுகதை தமிழக அரசு சிறந்த சிறுகதைக்காக வழங்கும் பரிசைப்பெறுகிறது.
காந்தி அடிகளின் 132 வது பிறந்தநாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி பல்வேறு இதழ்களில்வெளிவந்த சிறுகதைகள், கட்டுரைகள் ரேடியோ - டெலிவிஷனில் ஒலி மற்றும் ஒளிபரப்பப்பட்ட நாடகம், கவிதை மற்றும் பாடல்களுக்குபரிசுகளையும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக்கூட கல்லூரி மாணவர்களுக்கு சுழற் கேடயங்களையும் தமிழக அரசு வழங்குகிறது.
இந்த ஆண்டு சிறுகதைகளுக்கான முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய் சி.ஜே.ஷாஜகானுக்கும், இரண்டாவது பரிசாக 5000 ரூபாய் வரலொட்டிரங்கசாமிக்கும், ஈனத்தொழில் என்ற சிறுகதையை எழுதிய பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் கைதியாக உள்ள இரா.கண்ணனுக்கு மூன்றாவது பரிசாகமூவாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
காந்தி பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி மண்டபத்தில் மாலை ஐந்து மணிக்கு நடக்கும் சிறப்பு கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் இந்த பரிசுகளை வழங்குகின்றார்.












Click it and Unblock the Notifications