படிக்கட்டில் உற்சாகம் .. பஸ்சிலிருந்து விழுந்து வாலிபர் பலி
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மீது கண்டனத்துக்குரிய ஒரு தாக்குதல் முயற்சி - இதற்கு பதிலடி, பல இடங்களில் பஸ் எரிப்பு ;முதல்வர் மகன் அழகிரி மீது தி.மு.க. நடவடிக்கை - இதற்கு எதிரடி, மதுரையில் பஸ்கள் எரிப்பு ; ஜெயலலிதா வழக்கில் அவருக்குஎதிராக தீர்ப்பு - இதற்குச் சவால், தர்மபுரியில் மனிதர்களோடு பஸ் எரிப்பு ; சென்னையில் மாணவர்களுக்குக் கோபம் - பஸ்கள் மீதுகல்வீச்சு. இப்படி எந்த ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தாலும் சரி - பலியாவது பொதுச் சொத்துதான் ; அதுவும் குறிப்பாக பஸ்கள்தான்.
தொடர்ந்து நடந்து வருகிற இந்த அராஜகத்திற்கு அரசு அவ்வப்போது ஆட்சேபம் தெரிவித்து, எச்சகரிக்கை விட்டுவிடும்.பா.ம.க.வினர் பஸ் எரித்த போதும் எச்சரிக்கை விடப்பட்டது.
சிலர் கைதாகியிருக்கிறார்கள். வழக்கு நடக்குமா? எப்படி நடக்கும்? குற்றம் செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவார்களா ?என்றெல்லாம் கேட்டுப் பயனில்லை.
இது சட்டத்தைப் பொறுத்த விஷயமல்ல. ஆளும் கட்சிக்கும், பா.ம.க.வுக்கும் நிலவக் கூடிய உறவு முறையைப் பொறுத்த விஷயம்.
அரசுக்கு வேண்டாதவர் ஜெயலலிதா என்பதால், அவருடைய ஆதரவாளர்களின் பஸ் எரிப்பு அராஜகம் தண்டனைக்குள்ளாகும்.
அழகிரி சமாச்சாரம் வேறு. மதுரையில் பஸ்கள் எரிக்கப்பட்ட நிலையில் இது உட்கட்சி விவகாரம் என்று முதல்வர்கூறிவிட்டார். அப்படி என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை.
பஸ் எரிப்பு பற்றி தி.மு.க. தனது அடுத்த செயற்குழு கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, இத்துடன் இந்த உட்கட்சிபிரச்சனை தீர்ந்தது என்று அறிவித்து விடுமோ என்னவோ!
மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலோ, சட்டம் தானாக ஒதுங்கிக் கொள்கிறது.எச்சரிக்கை கூட, அரசிடமிருந்துஇல்லாமல், போலீஸ் அதிகாரியிடமிருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications