பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., மூப்பனார் கண்டனம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா, மூப்பனார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விலை உயர்வைகைவிடும் படி அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை வேட்டைக்காடாக திறந்து விட்டு விட்டு ஏழை எளிய நடுத்தரமக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின்விலையை கடுமையாக உயர்த்தியுள்ள மக்கள் விரோத பாஜக ஆட்சியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆண்டு தோறும் வருகிற திருவிழா போலசமையல் வாயு, பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் இடம் பெற்றிருக்கிற திமுக ஒவ்வொரு முறையும் இந்த விலை உயர்வை நியாயப்படுத்தி,வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுளளார்.
தமாகா தலைவர் மூப்பனார் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலிய பொருட்கள் விலையை அரசு உயர்த்திஇருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலையும் உயரும். ஏற்கனவே இந்தஆட்சியில் 3 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் விலையையும் மத்திய அரசுஉயர்த்தியிருப்பது மிகவும் வேதனையானது.
இதையெல்லாம் மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு கண்டும் காணாததுபோல் தூங்குகிறது. தமிழக மக்கள்நலனை திமு கவும், அதோடு கூட்டு சேர்ந்துள்ள பாஜகவும் துளியும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகின்றனஎன்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications