காட்டுக்குள் அதிரடிப்படை செல்லுமா? டி.ஜி.பி. பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் காட்டிற்குள் அதிரடிப்படையை அனுப்பும் அளவுக்கு நிலைமைமோசமாகவில்லை என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சர்மா தெரிவித்தார்.

வீரப்பன் விவகாரம் தொடர்பாக சென்னையில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:

கேள்வி: ராஜ்குமாரை மீட்க 4வது முறையாக காட்டுக்கு சென்ற அரசு தூதர் கோபால்வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளதை தோல்வி என்று எண்ணுகிறீர்களா?

பதில்: தோல்வி என்று கூறமுடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தொடரவிருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீரப்பன் ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறான். அவற்றைபற்றி கோபால் வீரப்பனிடம் விளக்க வேண்டியதிருக்கிறது. எனவே தான் தாமதம்.

கேள்வி: ராஜ்குமார் மீட்பு விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது?

பதில்: இரு மாநில அரசுகளும் சில முடிவுகளை எடுத்து அதன் படி நடவடிக்கைமேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை.

கேள்வி: ராஜ்குமாரை பேச்சுவார்த்தை மூலம் மீட்க முடியாது போல் தெரிகிறதே.அதிரடிப்படையை அனுப்புவீர்களா?

பதில்: அந்த அளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை. இது ஒருஉணர்ச்சிபூர்வமான பிரச்னை. இதை நிதானமாகத்தான் கையாள வேண்டும்.

கேள்வி: கோபால் முயற்சி வெற்றி பெறாததால் புதிய தூதராக வக்கீல்வேணுகோபாலை அனுப்புவீர்களா?

பதில்: கோபால் நடத்திய பேச்சு தோல்வி என்று கூற முடியாது. மேலும் தூதர் மாற்றம்என்பது இரு மாநில அரசுகளும் சேர்ந்து எடுக்கும் முடிவு என்றார் சர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+