காட்டுக்குள் அதிரடிப்படை செல்லுமா? டி.ஜி.பி. பேட்டி
சென்னை:
வீரப்பன் காட்டிற்குள் அதிரடிப்படையை அனுப்பும் அளவுக்கு நிலைமைமோசமாகவில்லை என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சர்மா தெரிவித்தார்.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக சென்னையில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ராஜ்குமாரை மீட்க 4வது முறையாக காட்டுக்கு சென்ற அரசு தூதர் கோபால்வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளதை தோல்வி என்று எண்ணுகிறீர்களா?
பதில்: தோல்வி என்று கூறமுடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தொடரவிருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீரப்பன் ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறான். அவற்றைபற்றி கோபால் வீரப்பனிடம் விளக்க வேண்டியதிருக்கிறது. எனவே தான் தாமதம்.
கேள்வி: ராஜ்குமார் மீட்பு விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது?
பதில்: இரு மாநில அரசுகளும் சில முடிவுகளை எடுத்து அதன் படி நடவடிக்கைமேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: ராஜ்குமாரை பேச்சுவார்த்தை மூலம் மீட்க முடியாது போல் தெரிகிறதே.அதிரடிப்படையை அனுப்புவீர்களா?
பதில்: அந்த அளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை. இது ஒருஉணர்ச்சிபூர்வமான பிரச்னை. இதை நிதானமாகத்தான் கையாள வேண்டும்.
கேள்வி: கோபால் முயற்சி வெற்றி பெறாததால் புதிய தூதராக வக்கீல்வேணுகோபாலை அனுப்புவீர்களா?
பதில்: கோபால் நடத்திய பேச்சு தோல்வி என்று கூற முடியாது. மேலும் தூதர் மாற்றம்என்பது இரு மாநில அரசுகளும் சேர்ந்து எடுக்கும் முடிவு என்றார் சர்மா.












Click it and Unblock the Notifications