கோபால் வரட்டும் பார்க்கலாம் .. கர்நாடகம்
பெங்களூர்:
நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத்தூதர் கோபால் திரும்பிய பிறகுதான் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து முடிந்தபின் தகவல்தொடர்புத் துறைஅமைச்சர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தோம். கோபால் இன்னும்திரும்பவில்லை. தொடர்ந்து வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் திரும்பி வந்த பின்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
நாகப்பா உண்மையிலேயே தப்பித்து வந்தாரா? அல்லது வீரப்பன் அவரை விடுவித்து விட்டாரா? என்றுதெரியவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது. ஆனால் அவரைப் பார்க்கும்போதுஅவர் தப்பித்து வந்து விட்டார் என்றுதான் தெரிகிறது.
அவர் தப்பித்து வந்துவிட்டதால் அடுத்து ஏற்படும் பின்விளைவு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது என்றார் சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications