சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களாக 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு
சிட்னி:
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) உறுப்பினர்களாக பல்வேறு விளையாட்டுக்களில் சாதனை படைத்த8 வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுசூ ஓ நீல் (நீச்சல்), ரஷ்யாவின் அலெக்சாண்டர் போபோவ் (நீச்சல்),உக்ரைன் நாட்டின் செர்ஜி புப்கா (போல்வால்ட்), செக் குடியரசின் ஜான் ஸெலெஸ்னி (ஜாவ்லின் துரோ),கனடாவின் சார்மெய்ன் குரூக்ஸ் (அதலெடிக்ஸ்), அமெரிக்காவின் ராபர்ட் டிவெர்ட்லிக் (வாலிபால்),ஜெர்மனியின் ரோலன்ட் பார் (படகுப் போட்டி), ஸ்பெயின் நாட்டின் மானுவேல் எஸ்டியார்டி (நீச்சல்)ஆகியோர் ஐ.ஓ.சி. உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் புப்கா, போபோவ், ஓ நீல், டிவெர்ட்லிக் ஆகியோர் 8 ஆண்டுகளுக்கும் மற்ற 4 பேர்நான்கு ஆண்டுகளுக்கும் ஐ.ஓ.சி. உறுப்பினர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஐ.ஓ.சி.யின்செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக 3 நாட்களுக்கு முன்புதான் புப்கா அறிவித்தார். இந்நிலையில் இப்போது தனக்கு இப் பெருமை கிடைத்துள்ளது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதசம்பவமாகும் என்று புப்கா கூறியுள்ளார்.