சென்னை காளி கோவிலில் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சை, கும்பகோணத்தை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலிலும் ஜெயலலிதா விசேஷ பூஜை நடத்தி சாமி கும்பிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கோயில் கோயிலாக சென்று கொண்டிருக்கின்றனர். வழக்கு, தண்டனை என்றுசட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இருவரும் அதற்கான பரிகாரங்களை கோயில்களில் செய்து வருகின்றனர்.
விசேஷ பூஜை, சிறப்பு யாகம், சுவாமி தரிசனம் என்று தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று முடித்து விட்டு திரும்பியுள்ளனர்.
அந்த கையோடு சென்னையில் உள்ள காளி கோவிலிலும் ஜெயலலிதா, சசிகலா தரிசனம் செய்தனர். வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்சைதாப்பேட்டையில் உள்ள இளங்காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை ஜெயலலிதா இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications