பேச்சால் உயர்ந்த பொன். ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாகர்கோவில் எம்.பி.யான பொன். ராதாகிருஷ்ணன் தனது இளம் வயதில் மத்தியஅமைச்சராகியுள்ளார்.
ராதாகிருஷ்ணனுக்கு 48 வயதாகிறது. முதன்முறையாக லோக்சபா எம்.பி.யான ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
வக்கீலாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார்.
பாரதிய ஜனதாக் கட்சியில் சேருமுன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்து வந்தார்.
திருமணம் ஆகாத ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மாவட்டம் ஆலத்தங்கரை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1952 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதிபிறந்தவர். நல்ல பேச்சாளர். தனது பேச்சாற்றலால் கட்சி வட்டாரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications