பாண்டி முதல்வருடன் மூப்பனார் ஆலோசனை
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சென்னையில் சனிக்கிழமை தமாகா தலைவர்மூப்பனாரை சந்தித்துப் பேசினார்.
பாண்டிச்சேரி ஆட்சிக்கு சவாலாக விளங்கும் கண்ணன் அணி பற்றி அவர்கள்விவாதித்தனர்.
பாண்டிச்சேரி தமாகாவை உடைத்துக் கொண்டு அமைச்சர் கண்ணன் தலைமையில்நான்கு எம்எல்ஏக்கள் தனி அணி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பாண்டிச்சேரிகாங்கிரஸ் - தமாகா கூட்டணி ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊசலாட்டத்தை பயன்படுத்தி சந்தடிச் சாக்கில் ஆட்சி அமைத்து விட பாமகதிட்டம் போடுகிறது. கண்ணன் அணியை கைக்குள் போட்டு திமுக ஆதரவுடன் ஆட்சிஅமைத்து விடலாம் என்று எண்ணுகிறது.
2001ல் புதுவையில் பாமக ஆட்சி என்ற ராமதாசின் கோஷத்தை இதன் மூலம்நிறைவேற்றி விடலாம் என்று பாமக துடிக்கிறது. இச்சூழ்நிலையில் முதல்வர் சண்முகம்அவசர அவசரமாக சென்னை வந்தார்.
சத்தியமூர்த்தி பவனில் மூப்பனாருடன் இப்பிரச்னைகள் குறித்து ஆலோசனைநடத்தினார். கண்ணனை சமாதானப்படுத்தி ஆதரவை தொடரச் செய்வது குறித்தும்,பாமக ராமதாஸ் வலையில் அவர் விழுந்திடாமல் தடுப்பது குறித்தும் இருவரும்விவாதித்தனர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் மூப்பனாரைசந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications