நாளை புதிய நீதிக்கட்சியின் மாநில மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாதிக் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக மாறிய புதிய நீதிக் கட்சியின் முதல் மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து இக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணியளவில் புதிய நீதிக் கட்சியின் மாநில மாநாட்டின் ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தில்இருந்து புறப்படுகிறது.
நந்தனம், சேமியர்ஸ் சாலை, டி.டி.கே.சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கடற்கரை சீரணி அரங்கை அடைகிறது.
பேரணிக்கு காஞ்சி பெரியப்பா ஜி.சுப்ரமணியமுதலியார், முன்னாள் எம்எல்ஏக்கள் கு.பா.பழனியப்பன், பொன்னுரங்க முதலியார், முன்னாள்அமைச்சர் வெள்ளச்சாமி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரணியின் முடிவில் கடற்கரை சீரணி அரங்கில் மாநில மாநாடு தொடங்கி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications