இந்திய ராணுவத் தளபதியானார் தமிழர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழரான லெப்டினென்ட் ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் இந்திய ராணுவத்தினதலைமைத் தளபதியாக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை ராணுவத் தளபதியாக இருந்து வந்த லெப்டினென்ட் வி.பி.மாலிக் ஓய்வுபெற்றதையடுத்து பத்மநாபன் புதிய தளபதியானார். அவர் இதுவரை வகித்து வந்ததுணைத் தளபதி பொறுப்பில், லெப்டினென்ட் ஜெனரல் விஜய் ஓபராய்நியமிக்கப்பட்டார்.
தமிழராக இருந்தாலும் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பத்மநாபன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆர்ட்டில்லரி பிரிவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர்தலைமைத் தளபதி ஆவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன், ஜெனரல்பி.பி.குமாரமங்கலம், ஜெனரல் ஓ.பி.மல்ஹோத்ரா, ஜெனரல் எஸ்.எப்.ரோட்ரிக்ஸ்ஆகியோர் ராணுவத்தின் உயரிய பொறுப்பில் இருந்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications