புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் ..கண்ணனின் புதிய கட்சி
பாண்டிச்சேரி:
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி புதுவை அமைச்சர் கண்ணன் தலைமையில் ""புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சி உதயமாகிறது.
இந்த கட்சிக்கு "ரோஜாப்பூ சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு மனு செய்யப்பட்டுள்ளது.
புதுவை தமாகா தலைவராக இருந்த அமைச்சர் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகினார். புதுவை தமாகா இரண்டாகஉடைந்தது. இவருக்கு ஆதரவாக மூன்று எம்எல்ஏக்கள் தமாகாவில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து கண்ணன் தலைமையில் புதுவை மாநில அளவில் புதிய கட்சி துவங்கப்படுகிறது. இந்த கட்சியின் துவக்க விழா அக்டோபர் 2ம் தேதி காலை 6மணிக்கு பாண்டிச்சேரி வைசியால் வீதியில் உள்ள அலுவலகத்தில் (முன்பு தமாகா அலுவலகம்) நடைபெறுகிறது.
கட்சியின் தலைவராக லட்சுமிநாராயணன் நியமிக்கப்படுகிறார். பொதுச் செயலாளராக கண்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. விழாவில்தமிழகத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
புதிய கட்சி தொடங்கினாலும் கண்ணன் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் தமாகா (மனோகர்) என்ற பெயரில் தனி அணியாக தொடர்ந்துநீடிப்பார்கள்.












Click it and Unblock the Notifications