மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ராஜ்குமார் மனைவி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் மல்லய்யா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா வெள்ளிக்கிழமை வீடுதிரும்பினார்.
பர்வதம்மாவுக்கு கடந்த 20 ம் தேதி நெஞ்சுவலியும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மல்லய்யா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர் ரமணாராவிடம் கேட்டபோது, பர்வதம்மா குணமாகி விட்டார். இடதுகாலிலும் அவருக்கு வலி இருந்தது. இப்போது பூரணகுணமடைந்து விட்டார் என்றார்.
மல்லய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்வம்மா கடந்த 25 ம் தேதி இறந்து விட்டார் என்று வதந்தி பரவி, அதன் எதிரொலியாகபெங்களூரில் பஸ் ஒன்றின்மீது கல்வீச்சு நடந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications