இன்று முதல் பெட்ரோல் விலை உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 40 ம் உயர்ந்தது.
மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்த இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, மத்திய அரசின் எண்ணெய் தொகுப்பு நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம்நாயக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
சென்னை நகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை:
பெட்ரோல்: லிட்டருக்கு ரூ 2.39. டீசல்: 1 லிட்டருக்கு ரூ 2.75 உயர்வு.
மண்ணெண்ணெய்: 1 லிட்டருக்கு ரூ 2.81. கேஸ் சிலிண்டர் விலை: ரூ 36.20 உயர்வு.
விமானப்பெட்ரோல்: 1 லிட்டருக்கு ரூ 3.75 உயர்வு