சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் யாருடன் கூட்டணி?
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து திருச்சியில் நடக்கும் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்றுஅக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சனிக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில்கட்சியின் நிலை, தேர்தல் கூட்டணி, தொகுதிபங்கீடு குறித்து விவாதிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மாநாட்டிற்காக திருச்சி விமான நிலையம் அருகே பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனைத்துநடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலம் அண்ணாசிலையில் தொடங்கி மாநாடு நடக்கும் இடத்தை வந்தடையும் என்றார்கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications