நாகர்கோவில் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்
டெல்லி:
டெல்லியில் மத்திய அமைச்சரவை சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. தமிழக பா.ஜ.க. எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகபதவியேற்றுக் கொண்டார்.
பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச் செயலாளர் வெங்கய்ய நாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதியஅமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன், சிவசேனை எம்.பி.ஸ்ரீஹத்நாயக், திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்ய பிரமோத்ஜா, தெலுங்கு தேச எம்.பி.யும், நடிகருமானகிருஷ்ணம் ராஜ் ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சமீபத்தில் மரணமடைந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த பங்காருலட்சுமண்,ராமஜெத்மலானி, உமாபாரதி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் ஏற்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களின் இலாகாக்கள்:
கேபினட்:
வெங்கய்யா நாயுடு- கிராமப்புற வளர்ச்சித் துறை
சுஷ்மா சுவராஜ் - தகவல் தொடர்புத்துறை
இணை அமைச்சர்கள்:
கிருஷ்ணராஜ்-வெளியுறவுத்துறை
பொன்.ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைஅமைச்சர்
சுரேஷ் பிரபு - மின்துறை
தனஞ்செயகுமார்--ஜவுளித்துறை இணைஅமைச்சர்
ஸ்ரீஹாட் யாசன் நாயக்- விவசாயத்துறை இணைஅமைச்சர்
சையத் ஹனாவாஸ் ஹூசேன்- மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
சத்யமுகர்ஜி-ரசாயனத்துறை
சுந்தர்லால் பட்வா- ரசாயனம் மற்றும் உரத்துறை இணைஅமைச்சர்












Click it and Unblock the Notifications