மமதா பானர்ஜி, அஜீத் பாஞ்சா ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மத்திய அமைச்சர்கள் மம்தா பானர்ஜியும், அஜித் குமார் பாஞ்சாவும் சனிக்கிழமை தங்கள் அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தனர்.

வாஜ்பாய் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தனர்.

மம்தா பானர்ஜி: இவர் ரயில்வே அமைச்சராக இருந்தவர். மேற்குவங்காளத்தில் ஜோதி பாசு அரசு டிஸ்மிஸ் செய்யக் கோரியும், அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல் படுத்தக் கோரியும் வற்புறுத்தி வந்தார். மித்னாபூர் மாவட்டத்தில் அடிக்கடி வன்முறைகள் நடப்பதைக் காரணம் காட்டி ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் வாஜ்பாய் இவ்விஷயத்தில் மெளனம் சாதித்ததைத் தொடர்ந்து இவர் இந்த முடிவைஎடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அஜித் குமார் பாஞ்சா: இவர் வெளியுறவுத்துறை இணைஅமைச்சராக இருந்தவர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மேல் இவர் அதிருப்தியுடனும்,தன்னை அவர் ஒன்றுமில்லாமல் செய்ததாகவும் அடிக்கடி கூறி வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதைக் காரணம் காட்டி இருவரும் ராஜினாமா செய்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+