கிராமங்களில் 1 மணி நேரப் பள்ளி .. சர்வோதய சங்கம்
கோவை:
காந்தியின் கொள்கையைப் பின்பற்றி, கிராமந்தோறும் குழந்தைகளுக்கு ஒரு மணிநேரப் பள்ளி நடத்த அகில இந்திய மக்கள் சர்வோதய சங்கம் திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து அகில இந்திய மக்கள் சர்வவோதய சங்கத்தின் தலைவரும், முன்னாள்காந்தி கிராம நிகர் நிலைப் பள்ளியின் துணைவேந்தருமான மார்க்கண்டன்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகம் முழுவதும் காந்தியக் கொள்கையின் அவசியம் உணரப்பட்டு வருகிறது.இந்தியாவில் கிராமங்களிலும் நகரங்களிலும், சாந்தி சேனை எனப்படும்அமைதிப்படையை உருவாக்கி வருகிறோம்.
கூட்டு வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சத்தியம், அகிம்சைஆகியவற்றை உருவாக்கவும் பாடுபட்டு வருகிறோம்.
தற்போதுள்ள சூழ்நலையில், அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும்லஞ்சம், முறைகேடுகள் நடந்து வருகிறது.
எல்லா இடங்களிலும் சீர்கேடுகள் தலைதூக்கியுள்ளன. இப்போது நடக்கும்போராட்டங்களில் எதுவும் சத்தியாகிரகம் இல்லை. அஹிம்சை இல்லை.மற்றவர்களுக்குத் துன்பம் நேராத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும்என்பதற்காகவே இத்தகைய போராட்டத்தில், ஈடுபடவுள்ளோம்.
இது தவிர, சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாதயாத்திரைசெல்லவுள்ளோம். இந்த பாதயாத்திரை தமிழகம் முழுவதிலும் நடக்கும்.
அரசியல் அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.மற்றவர்களுக்கு எதிராக எவ்விதப் போராட்டங்களையோ, மற்றவர்களுக்கு பாதிப்புஏற்படும் வகையிலோ இந்த சத்தியகிரகப் போராட்டம் அமையாது என்று தெரிவித்தார்மார்க்கண்டன்.












Click it and Unblock the Notifications