மனைவியைக் கொன்றவர் ஜாமீனில் வந்து தற்கொலை
சென்னை:
மனைவியை கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போன கணவர் ஜாமீனில் வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாலகேசவலு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்புரவுபணியாளராக இருக்கிறார். இவரது மனைவி நிர்மலா.
நிர்மலாவுக்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதாக பாலகேசவலு சந்தேகப்பட்டார். இதனால்மனைவியை அவர் வெறுத்தார். அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருவரும் குடும்பம் நடத்தினர்.
ஒரு நாள் சந்தேகத்தின் உச்சக்கட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் பாலகேசவலு.போலீசார் தனிப்படை அமைத்து தேடி பாலகேசவலுவை கைது செய்தனர்.
சிறையில் இருந்த பாலகேசவலு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில மனு செய்தார். அதன்படி இவருக்கு நிபந்தனைஜாமீன் வழங்கப்பட்டது. ஆவடி காவல் நிலையத்தில் தினம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுநிபந்தனை.
அதன்படி செய்து வந்த பாலகேசவலுவை, மாமனாரும், மனைவியின் உறவினரும் ரயில் நிலையத்தில் வைத்துபிடித்துக் கொண்டனர். மகளை அடித்துக் கொன்றதால் கோபத்தில் இருந்த நிர்மலாவின் தந்தை, பாலகேசவலுவைஇரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி கை, கால்களை உடைத்தார்.
இதனால் பாலகேசவலுவுக்கு கால், கைகள் செயல் இழந்தன. எந்த வேலையும் செய்ய முடியாமல் இருந்த அவர்உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications