"சிறை நிரப்பிய தமாகா தொண்டர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட த.மா.கா., வினர் அனைவரும் முதல்வர் கருணாநிதி உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை விடுதலைசெய்யப்பட்டனர்.
இதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி முதல்வர் உத்தரவிட்டது வேலூர், திருச்சி, கடலூர்சிறைகளுக்கு வெள்ளிக்கிழமை வரைப் போய்ச் சேர்ந்துள்ளது.
இதனால் அந்தச் சிறையில் உள்ளவர்கள் மட்டும் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications