கட்சி தொடங்கினார் புதுவை கண்ணன்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த கண்ணன் திங்கள்கிழமை புதுவை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
கட்சியின் பெயர் பொறித்த மூவண்ணக் கொடியை த.மா.கா. முன்னாள் பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் ஏற்றி வைத்தார். கட்சித் துவக்கவிழாவிற்கு முன்னதாக, கணபதி ஹோமமும், சுதர்ஸன ஹோமமும் நடந்தது.
கட்சி உதயமானபின் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக கண்ணன் இந்தப் புதியக் கட்சியைத் துவக்கியுள்ளார். புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்என்றார்.
யு.என். ஐ.












Click it and Unblock the Notifications