வீரப்பனுக்கு பர்வதம்மா மீண்டும் கோரிக்கை
பெங்களூர்:
என் கணவரை உடனே விடுவியுங்கள் என்று பர்வதம்மா ரேடியோ மூலம் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் பெங்களூர்ரேடியோவில் ஒரே நாளில் 7 முறை ஒலிபரப்பப்பட்டது.
ராஜ்குமாரை மீட்பதற்காகக் நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற நக்கீரன் கோபால் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார்.
இதையடுத்து ராஜ்குமார் குடும்பத்தார் ரேடியோ மூலம் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், வீரப்பா, அரசுத்தூதர் கோபாலைக்காட்டுக்கு அழைத்து அவருடன் என் கணவரை அனுப்பி வைத்துவிடுங்கள்.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் எனது கணவரை அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரேடியோவில் பர்வதம்மா தவிர, சிவராஜ்குமார், ராகவேந்திரராஜ்குமார் ஆகியோரும் பேசியுளளனர். இந்த உருக்கமான பேச்சு பெங்களூர்ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் 7 முறை ஒலிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications