எல்லையில் பாக். குண்டுவீச்சு .. உயிருக்குப் பயந்து மக்கள் ஓட்டம்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் குண்டுவீச்சு நடத்தி வருகின்றன.இதனால் ஏராளமான மக்கள் உயிருக்குப் பயந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற வண்ணம்உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தானிய துருப்புக்கள்செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான குண்டுவீச்சை நடத்தி வருகின்றன.
இதனால், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பரம்பில்லா, ஜப்லா, சுக்தார் உள்பட 10-க்கும்மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உயிருக்குப் பயந்து தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.
பாகிஸ்தானிய துருப்புக்கள் நடத்தி குண்டுவீச்சில் ஒரு பள்ளிச் சிறுவன் படுகாயமடைந்தான் என்று அரசுதுருப்புக்கள் தெரிவித்தன. இந்தியத் துருப்புக்கள் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிய துருப்புக்களின் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள யூரி டவுன்தான் பாகிஸ்தானிய துருப்புக்களின் இலக்குக்குக் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 6 குண்டுகள் வெடித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications