தலிபான்களைக் கவனிக்க கூட்டுக் குழு .. இந்தியா, ரஷியா முடிவு
டெல்லி:
ஆப்கானிஸ்தான் விவகாரத்தைக் கவனிப்பதற்காக கூட்டுக் குழுவை அமைக்கஇந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை பரப்புவதில் ஆப்கானிஸ்தானைக் கையில்வைத்துள்ள தலிபான் அமைப்பினர்தான் காரணம் என இந்தியாவும், ரஷியாவும்நினைக்கின்றன.
இந்தியாவின் காஷ்மீர் மற்றும் ரஷியாவின் செச்னியாவில் உள்ள தீவிரவாதிகளுக்குதலிபான் ஆதரவு இருப்பதாகவும் இரு நாடுகளும் கருதுகின்றன. இதனால்ஆப்கானிஸ்தான் விவகாரத்தை சேர்ந்து கவனிக்க இரு நாடுகளும் முடிவுசெய்துள்ளன.
செவ்வாய்க்கிழமை பிரமதர் வாஜ்பாய் மற்றும் இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புடின்ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த முடிவுஎட்டப்பட்டது.
இருப்பினும் கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக இதுவரை ஒப்பந்தம் எதுவும்ஏற்படவில்லை.
டாங்குகள் வாங்கும் ஒப்பந்தம் இறுதியாகிறது:
இதற்கிடையே, ரஷியாவின் டி-90 ரக டாங்குகள் மற்றும் சுகோய்-30 ரக போர்விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்றுதெரிகிறது.
இதுதொடர்பாக நீண்ட கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் மூலம் ரஷியாவின் அதிநவீன போர்விமானம் மற்றும் டாங்குகள் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
டி-90 ரக டாங்குகள் மூலம் நவீன ரக ஏவுகணைகளை ஏவ முடியும். அதே போல,உலகிலேயே அதி நவீன போர் விமானமாக சுகோய் விளங்குகிறது.
செவ்வாய்க்கிழமை இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தம் தொடர்பான ஷரத்துக்களைஇறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒப்பந்தம் கையெழுத்தாக சில நாட்கள்ஆனாலும் கூட கொள்கை அளவில் முதலில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரஷியாவிடமிருந்து 300 டி-90 ரக டாங்குகளையும், 140 சுகோய் போர் விமானங்களைஇந்தியாவில் தயாரிப்பதற்கான அனுமதியையும் இந்தியா வாங்கவுள்ளது.
சுகோய் தயாரிப்பிற்கான செலவு 2 பில்லியன் டாலர்களைத் தொடும் என்றுதெரிகிறது.டாங்குகளுக்கான செலவு குறித்துத் தெரியவில்லை.
ஏற்னவே இந்திய விமானப் படைக்குத் தேவையான 50 சுகோய் போர் விமானங்களைவாங்க ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரூ. 78 பில்லியன்தொகைக்கான ஒப்பந்தம் இது இருப்பினும் இதுவரை 18 விமானங்கள் மட்டுமேஇந்தியா வந்துள்ளன.
டி-90 ரக டாங்குகளைப் பொறுத்தவரை, ரஷியாவிடமிருந்து இந்தியா 100டாங்குகளைப் பெறும். மீதமுள்ள 200 டாங்குகளை தமிழகத்தின் ஆவடி நகரிலுள்ளடாங்குகள் தொழிற்சாலையில் தயாரித்துக் கொள்வதற்கான அனுமதியைரஷியாவிடமிருந்து பெறும்.
இதேபோல, அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் விமானம் தாங்கிக் கப்பலை வாங்குவதுதொடர்பாகவும் ரஷியாவிடம் இந்தியா பேசி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாகஇந்த விவகாரம் நிலுவையில் இருந்து வருகிறது. இதை இந்தியாவுக்கு இலவசமாகவழங்க ரஷியா முன்வந்துள்ள. இருப்பினும் இதை மராமத்து செய்ய இந்தியாவுக்கு700 மில்லியன் டாலர் தேவைப்படும்.
கோர்ஷ்கோவ் கப்பலில் இருந்து செயல்பட ரஷியாவின் மிக்-29கே ரக போர்விமானங்கள் தகுதியானவை என்று இந்தியா அடையாளம் கண்டுள்ளது. எனவே 40போர் விமானங்களை வாங்குவது குறித்தும் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications