For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரிஸா கவர்னரின் உறவுப் பெண்ணுக்கு சென்னையில் அடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒரிஸா கவர்னரின் உறவுக்காரப் பெண்ணுக்கு சென்னை ஜவுளிக் கடையில் அடி உதை விழுந்தது. குடையை திருடியதாக அப்பெண்மணி, கடை ஊழியர்களால்தாக்கப்பட்டார்.

ஒரிஸா மாநில கவர்னாக இருப்பவர் எம்.எம்.ராஜேந்திரன். இவரது உறவுக்காரப் பெண் விசாலாட்சி (45). சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஸ்பள்ளியில் 15 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இவர் தனது சகோதரர் நந்தகுமார் மற்றும் குழந்தைகளுடன் திநகரில் உள்ள ஜெயச்சந்திரா டெக்ஸ்டைல் என்ற பிரபல ஜவுளிக் கடையில் துணி வாங்கச்சென்றனர்.

மூன்றாவது மாடியில் குழந்தைகளுக்காக சகோதரர் நந்தகுமார் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அடுத்த தளத்தில் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு,குடை ஒன்றையும் வாங்கிக் கொண்டு பில் போடுவதற்காக கீழ் தளத்திற்கு வந்தார் விசாலாட்சி.

கூட்டம் அதிகமாக இருக்கவே, குழந்தைகளுக்காக காத்திருந்தார். அப்போது கடை ஊழியர்கள் கையில் இருந்த குடையை எப்படி எடுத்து வந்தீர்கள்என்று சந்தேகத்தோடு கேட்டனர். இவர் பில் போடுவதற்காக கொண்டு வந்துள்ளேன் என்று கூறிய பதிலை உதாசீனப்படுத்தி விட்டு, விசாலாட்சியைதலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றனர்.

கல்லாவில் இருந்த ஊழியர்கள் அவரை அடித்தனர். பின்னர் போலீசுக்கு போனில் திருட்டுப் புகாரும் கொடுத்து விட்டனர். விரைந்து வந்த போலீசாரிடம்எவ்வளவோ விளக்கம் சொல்லியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

கடை அதிபரின் மாமூலான செல்வாக்கிற்கு பயந்து விசாலாட்சியின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

கவர்னரின் உறவினர்; பள்ளி ஆசிரியை என்றெல்லாம் எடுத்துக் கூறியும் ஏற்காத தி.நகர் போலீசார் மீது அரசியல்வாதிகள் செல்வாக்குடன் சென்னைபோலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடம் புகார் செய்துள்ளார் விசாலாட்சி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X