சென்னையில் நாளை கலெக்டர்கள் மாநாடு
சென்னை:
சென்னையில் வியாழக் கிழமை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.இம்மாநாட்டை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
நிர்வாகம் முழுவதையும் கணினி மயமாக்கி, கணினி ஆளுமை மூலம்ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க தமிழக அரசால் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் மாநகராட்சிகளில்சொத்துவரி நிர்ணயித்தல், வரிவசூல், தொழில் வரி நிர்ணயம் மற்றும் வசூல், போன்றபணிகளை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசுத் துறைகளிலும் கணினிமயமாக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வுசெய்யவும், மின்னணு ஆளுமையை முழுமையாக செயலாக்கத்திற்கு கொண்டுவரவும், "காகிதம் இல்லா நடைமுறைக்கு திட்டங்கள் வகுத்திடவும், 5ம் தேதி சென்னைகோட்டையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மாநாடுநடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications