இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறைகிறது
வாஷிங்டன்:
இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறைந்து வருகிறது என்று 2000-ம்ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைப்புவெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டின்அளவு 1999-ம் ஆண்டில் 2.2. பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் அளவு 2.6 பில்லியன்டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளில் 1999-ம் ஆண்டில்தான்இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு அளவு மிகவும் குறைந்துள்ளது.
1997-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகபட்சமாக 3.5பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு அடுத்தஆண்டுகளில் முதலீட்டுத் தொகை குறைந்துவிட்டது.
இந்தியாவுடன் ஒப்புப்படுத்திப் பார்க்கும்போது சில ஆசிய நாடுகளில் நேரடிவெளிநாட்டு முதலீடு அதிகமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின்வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைப்பின் தலைமைப் பொருளாதாரநிபுணர் கார்ல் பி சாவந்த் கூறியுள்ளார்.
1999-ம் ஆண்டில் சீனாவில் 40 பில்லியன் டாலர்கள், சிங்கப்பூரில் 6.9 பில்லியன்டாலர்கள், ஹாங்காங்கில் 23 பில்லியன் டாலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிக அளவில் கவரும் வகையிலேயே இந்தியமார்க்கெட் உள்ளது. ஆனால், மத்தியில் உள்ள வாஜ்பாய் தலைமையிலான பாஜகஅரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதில் வேகம் காட்டத்தவறிவிட்டது.
இதனால், பொருளாதாரக் கொள்கைகள் மீது ஏற்பட்ட சந்தேகம் உள்ளிட்டபிரச்சினைகளால் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடுகள் தயக்கம் காட்டுகின்றனஎன்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.