கற்பழிப்பு: ராணுவ கேப்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல்
ஸ்ரீநகர்:
பெண்ணைக் கற்பழித்த குற்றத்துக்காக ராணுவ கேப்டன் ரவீந்தர் சிங் தெவாஷியாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பணிஹால் மாவட்டத்தில் இப் பணியில்ஈடுபட்டு வரும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையின் 12-வது பிரிவின் கேப்டனாக ரவீந்தர் சிங் தெவாஷியா பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி 14-மம் தேதி நவுகாம் கிராமத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர்போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர் இப் புகாரை ராணுவம் ஏற்று விசாரித்தது. ராணுவ விசாரணையில் ரவீந்தர சிங் தெவாஷியாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதுராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ் வழக்கின் முடிவில் ரவீந்தர் சிங் தெவாஷியாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் ராணுவப் பணியிலிருந்துநீக்கப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications