தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க கூடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி:
தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் மூன்றுநாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் செயல்பாட்டை சமீபத்தில் குறை கூறிய ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இப்போது தேசியப் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டத் துவங்கியுள்ளது.
அக்டோபர் 13-ம் தேதி ஆக்ராவில் மூன்று நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாடு குறித்து பா.ஜ.க. தலைவர் பகவான் சங்கர் ராவத் கூறுகையில், இந்தமாநாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. உள்நாட்டுமற்றும் வெளிப் பாதுகாப்பு குறித்து யாரும் இப்போது அதிகம் கவலைப்படுவதாகத்தெரியவில்லை.
மாநாட்டில் கலந்து கொள்ள சோனியா காந்தி தவிர, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், சி.பி.எம். கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே கருத்தைக்கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கொள்கையில் வேறுபாடுகள்இருந்தாலும் கூட, தேசியப் பாதுகாப்பு என்று வரும் போது அதில் அனைவருக்கும்ஒரே கருத்துதான் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமரின் அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும்இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார் ராவத்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications