40 சதவீத ஏர்இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா குரூப் முடிவு
மும்பை:
மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க டாடா குரூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. அதாவது ஏர் இந்தியா நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை தனியார்களுக்கு விற்க முடிவு செய்யப் பட்டது.
இந்த 80 சதவீத பங்குகளில் 40 சதவீதத்தை உள்நாட்டு நிறுவனங்களும், மீதமுள்ள40 சதவீத பங்குகளை வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் விற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை அடுத்து, ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளையும் வாங்க டாடா குரூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத் தகவலை அந் நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்துதான் ஏர் இந்தியாவின் பங்குகளை டாடா குரூப் நிறுவனம் வாங்கும். இந்தியாவின் பெரிய விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்கும் நடவடிக்கையில் பங்குகொள்வது குறித்து பெருமைப்படுவதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.
1953-ம் ஆண்டுதான் ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாக்கள்தான் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications