கூட்டுறவு வங்கியில் மோசடி: ஊழியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

பல்லடம்:

கோவை அருகே பல்லடத்தில் வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு வங்கியில் ரூ. 5.13 லட்சம் ரூபாய் மோசடிசெய்த வழக்கில், வங்கி ஊழியர் மற்றும் தலைவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

பல்லடத்தையடுத்த களந்தையில்,வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கூட்டுறவுச் சங்கதணிக்கை அதிகாரிகள் கணக்குகளை சரிபார்த்தனர்.

அப்போது, கடந்த 96ம் ஆண்டு முதல், 99ம் ஆண்டுவரை பல்வேறு மோசடிகள் டந்திருப்பதைக் கண்டு பிடித்தனர்.

வங்கியில் டெபாசிட் செய்த பலருக்கு ரசீது வழங்காமல் மோசடியாகப் பணம் கையாளப்பட்டிருப்பதை அறிந்தனர்.இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர்.

இந்தப் புகாரையடுத்து வங்கித் தலைவர் கண்ணுச்சாமி (70), வங்கி ஊழியர்கள் திருநாவுக்கரசு (50), ஜெயராம் (45)ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் கண்ணுச்சாமி மற்றும் ஜெயராமைக் கைது செய்தனர்.

தலைமறைவான திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+