For Daily Alerts
Just In
புலிகளின் மனிதவெடி குண்டுக்கு 12 ஆளும் கட்சியினர் பலி
கொழும்பு:
வவுனியா அருகே இலங்கை ஆளும் கட்சியான மக்கள் கூட்டணி நடத்திய தேர்தல் பிரசாரப் பேரணியில்விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு வெடித்தது. இதில் 12 பேர் இறந்தனர்.
மதவாச்சி என்ற இடத்தில் இந்த சம்பவம் வியாக்கிழமை நடந்தது. இந்தப் பகுதி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தேர்தலை எதிர்த்து வரும் புலிகள் பிரசாரக் கூட்டங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமைகிழக்கு திரிகோணமலையில் தேர்தல் கூட்டத்தில் புலிகளின் மனித வெடி குண்டு வெடித்து 26 பேர் இறந்தனர்.
இப்போது நடந்துள்ள 2-வது தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவருமே ஆளும்கட்சியினர்.
இந் நிலையில் வடக்கு மட்டக்களப்பு பகுதியில் நடந்த சண்டையில் 9 விடுதலைப்புலிகளும் 4 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர்.
Comments
Story first published: Friday, October 6, 2000, 5:30 [IST]