எங்களுக்கு இதெல்லாம் வேண்டும்!
உடுமலைப்பேட்டை:
கம்மநாயுடு இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கம்மநாயுடுமகாஜன சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடுமலைப் பேட்டையில் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கெங்குசாமி நாயுடு தலைமை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள கம்மநிாயுடு இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். கம்மநாயுடு இனத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நீதிபதிகளை உயர்நீதிமன்றத்தில்நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வுக் கமிட்டி உறுப்பினராக கம்மநாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள்இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களில் இந்தஇனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 ஆகிய உயர் பதவிகளில் கம்மநாயுடு இனத்திற்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்ட அளவிலான பணியிடங்களை நிரப்பும் போது அந்த மாவட்டத்தில்உள்ள விகிதாச்சார அடிப்படையில் கம்ம நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications